எடப்பாடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் : ஜவஹிருல்லா

கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்க வந்த மனித அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்கவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் இதுவரை 4 ஆயுள் தண்டனை கைதிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சிறையில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபிதாகீருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அபுதாகீரை தமிழக அரசு வெளியே விடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ஒரு மாத பாரோலுக்கு பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை கைதி அபுதாகீருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பாகும். மேலும், சட்ட ஆலோசனைப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.காஷ்மீர் சிறுமி படுகொலையில் சங்பரிவார் அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திலும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும், எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...