கர்நாடக காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : நீலகிரி காய்கறிகள் விலை சரிவு

நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.


நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை ஓரளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் முக்கிய பயிர்களான உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டன. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்தாண்டு உச்சம் தொட்ட காய்கறிகளின் விலை இந்தாண்டு கடுமையாக சரிந்துள்ளது.



மேலும், கர்நாடகா மாநிலத்திலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரியில் விளையும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி, கிராமந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். உதகை, கூடலூர் மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டல்பெட்டிலிருந்து காய்கறி வரத்து வரும் நிலையில், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளிலிருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கோத்தகிரி வரும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்கள் முதல் குக்கிராமங்களை வரை காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். விலை சரிவு குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு சராசரி மழை பெய்ததால், காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. முக்கிய காய்கறிகளான உருளைக் கிழங்கு கிலோ ரூ.20-24, பீட்ரூட் ரூ.13-க்கு விலை போனது. கடந்த மாதம் ரூ.70க்கு விலை கேரட், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



முட்டைக்கோஸ் கிலோ ரூ.15-க்கு, பீன்ஸ் கிலோ ரூ.20, பட்டாணி கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் பெரும்பாலானோர் காய்கறிகளை அறுவடை செய்தனர். இதனால், வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறைந்து விட்டது." என்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...