அ.தி.மு.க., ஆட்சியில் கோவை மாவட்டம் பின்தங்கியுள்ளது : தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக்

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார். 

பீளமேடு பகுதியில் உள்ள பூங்காவை தெற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் புதர்கள் மண்டியும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்திருப்பதையும் பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, கோவை மாநகராட்சி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும், பழைய பூங்காக்களையும் சேர்த்து பராமரிக்க ஒப்பந்த தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவைகளை அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

கடந்த 2 ஆண்டு காலமாக இந்தப் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், புதர்கள் மண்டியும், விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. தி.மு.க., சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடுபுடி அரசான எடப்பாடி அரசு தோல்வியை கண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை முற்றிலுமாக செயலிழந்து உள்ளது. 

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி எந்த நடவடிக்கையோ அக்கறை காட்டுவதில்லை. கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தத்தளித்து வருகிறது," என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...