கோவை ஏ.டி.எம் மையங்களில் தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி தகவல்களை திருட முயற்சி

கோவை: கோவையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் காமிராக்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கோவையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம்-களில் ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் காமிராக்களை பொருத்தி தகவல்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கு சந்தை அலுவலகம் அருகில் ஒரு தேசிய வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற நபர் ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்தினார். அப்போது, இயந்திரத்தில் இருந்த கருவி கழன்று வெளியே விழுந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கழன்று விழுந்த அந்த கருவி டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி என்று தெரியவந்தது. அதேபோல் பின் நம்பர் பதிவு செய்யும் இடத்தில் ஒரு சிறிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அதனைப் பொருத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.



இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள வங்கி கண்காணிப்பு காமிராவில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்திய ஆசாமிகளின் முகம் பதிவாகியுள்ளது. அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



ஏ.டி.எம் மையங்களை கண்காணிக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்துள்ளோம். ஆனால் பணத்தை நிரப்புவதோடு சரி, அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து வங்கி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்கள் முறையாக ஆய்வு செய்வதும் இல்லை. இதனால், பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ளது.

இதேபோல, கிராஸ்கட் சாலை, பீளமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத ஏ.டி.எம்.களை குறிவைத்து மோசடி ஆசாமிகள் ஸ்கிம்மர் கருவிகள் பொருத்தியிருந்தது தெரியவந்தது. அவற்றை பொருத்திய ஆசாமிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...