மேட்டுப்பாளையத்தில் பலாப்பழங்களுக்காக அரசு பண்ணையை முற்றுகையிடும் காட்டு யானைகள்

மேட்டுப்பாளையம்: பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப் பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது பண்ணை நிர்வாகம்.


மேட்டுப்பாளையம்: பலாப்பழங்களை தேடி கல்லார் அரசு பழப் பண்ணையை காட்டு யானைகள் முற்றுகையிட்டு மரங்களை சாய்க்க துவங்கியுள்ளதால் மரங்களில் உள்ள பழங்களை அகற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது பண்ணை நிர்வாகம்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பழமையான பழப் பண்ணை உள்ளது. நீலகிரி மலைக்காட்டின் அடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் சீரான சீதோஷன நிலை காரணமாக அந்த பழப் பண்ணையில் துரியன் பழம், முட்டைப்பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், சிங்கப்பூர் பலா உள்ளிட்ட பல அரிய வகை பழங்கள் ஏராளமாக விளைந்து வருகின்றன.

தற்போது பலா சீசன் துவங்கியுள்ள நிலையில் அங்குள்ள உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட பலா மரங்களில் பலாப்பழங்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன.

மேலும், அவை பழுக்கத் தொடங்கியுள்ளதால், அதில் இருந்து வீசும் வாசனையால் ஈர்க்கப்பட்டு காட்டு யானைகள் பண்ணையை முற்றுகையிட தொடங்கியுள்ளன. இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட கம்பி வேலிகளை துண்டித்துவிட்டு பண்ணைக்குள் நுழையும் யானைகள் மரங்களில் உள்ள பலாப்பழங்களை பறித்து உண்ணுகின்றன.

உயரமாக வளரும் தன்மையுள்ள பலா மரங்களில் பழங்களை தனது துதிக்கையால் பறிக்க இயலாவிட்டால், மரங்களை சாய்த்து விட்டு அதில் உள்ள பழங்களை ருசிக்கத் தொடங்கிவிடுகின்றன காட்டு யானைகள்.

மேலும், பண்ணையைச் சுற்றியுள்ள வனத்தில் இருந்து வரும் குரங்கு கூட்டங்கள் அங்கேயே முகாமிட்டு பலாப்பழங்களை கடித்து சேதப்படுத்துகின்றன. யானை மற்றும் குரங்குகளால் பலா மரங்கள் மட்டுமின்றி அங்கு வளர்க்கப்பட்டு வரும் பிற வகை அரிய வகை மரங்களும், செடிகளும், விற்பனைக்காக தயாராகும் மூலிகை மற்றும் மலர் நாற்றுக்களும் சேதமடைந்து வருகின்றன. மேலும், அப்பண்ணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளும் வருவதால், வனத்துறையினரின் ஆலோசனைப்படி பண்ணையில் உள்ள பலா மரங்களில் இருந்து பழங்களை அகற்றும் பணியை பண்ணை நிர்வாகம் துவங்கியுள்ளது.



இதற்காக கல்லார் பழப் பண்ணையில் பழுக்கும் நிலையில் உள்ள பலாக்களை பறித்து விற்பனை செய்துகொள்ள முதல் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது, மரங்களில் இருந்து பழங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...