தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிறிஸ்தவ சிறுபான்மை பேரவையினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிக்கும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கிறிஸ்தவ அமைப்பினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், சிறுமி ஆசிபா கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...