மனித - விலங்குகள் மோதலை தடுக்கும் சிறப்பு குழுக்கள் நியமனம்

நீலகிரி: மனித விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.


நீலகிரி: மனித -  விலங்குகள் மோதலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், யானை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமப் புறங்களிலும், நகர் பகுதிகளிலும் வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சூறையாடி வருகின்றன. இதனால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, மனித உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் முயற்சியில் வனத்துறை சார்பில் 9 பேர் கொண்ட சிறப்பு குழுக்களை இன்று உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் வன விலங்குகள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக 0423-2440968 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொண்டால், உடனடியாக அப்பகுதிக்கு சிறப்பு குழுக்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று வனவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 சிறப்பு குழுக்கள் ஈடுபடவுள்ளனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...