கோவையில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்க செல்போன் எண் அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு சரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நொய்யல் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வரும் போது சமூக ஆர்வலர்கள் லாரியைப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பேரூர் பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரிகள் செயல்படுவதாகவும் செய்திகளில் வெளியானது. மேலும், மது விற்பனையும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து கோவை மாவட்ட சிறப்பு பிரிவினர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளனர்.



அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி, போலி மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக செய்திகளில் வெளிவருகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை புறநகர் மாவட்ட பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் குறித்த அறிந்தால், 94458-46282 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை அளிக்கலாம். இதில் தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தர வேண்டியது இல்லை, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...