குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர் : தகவல் கொடுத்தும் அலட்சியம் காட்டிய அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 



திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் திட்ட குடிநீர் மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருமுருகன்பூண்டி பகுதியில் இத்திட்டக் குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது. 

இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் காட்டினர். இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது. 

கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், நீரை சேமிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...