பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டி சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர்

சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை : ராஜ்பவனில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி விவகாரம், தமிழக பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை  நியமித்தது, பாலியல் புகாரில் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி சிக்கியுள்ளது போன்ற சூழ்நிலைகள் நடுவே இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். 

பதவியேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் மாளிகையில்  இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு திணறினார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார் ஆளுநர். 



இந்த சூழலில், தனது பேத்தியிடம் நடந்து கொள்வதைப் போல் ஒரு மாநிலத்தின் ஆளுநர், பெண் செய்தியாளர் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா?  என்ற கேள்வியெழுந்துள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய இந்த சூழலில் ஆளுநர் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழகத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...