முடிவுக்கு வந்தது சினிமா ஸ்ட்ரைக்

சென்னை: சினிமா சங்கத்தினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை: சினிமா சங்கத்தினர் நேற்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைத் துறையினரின் கடந்த 47 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக புதிய திரைப்படங்கள் வெளியாகாத காரணத்தால் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கும், வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்கள், டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதிய படங்கள் வெளியீடு மற்றும் படப்பிடிப்பு வேலைகளைத் துவங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...