திருப்பூரில் அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா கார் மோதியதில் தி.மு.க உறுப்பினர் பலி

திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூர் தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). அப்பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவர் அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தனது நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோபி - குன்னத்தூர் சாலை செட்டிகுட்டை பிரிவு என்னுமிடத்தில் எம்.பி. சத்தியபாமா-வை கோவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர அவரது காரை ஓட்டுநர் செந்தில்குமார் வேகமாக இயக்கி வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அருண்குமார் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...