மாநகரில் ஹெல்மெட் அணிந்து பயணித்த மகளிருக்கு ரோஜாப் பூ வழங்கிய குழந்தைகள்

கோவை: கோவை மாநகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி வந்த மகளிருக்கு பள்ளி சிறுமிகள் இனிப்பு மற்றும் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கோவை: கோவை மாநகரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கி வந்த மகளிருக்கு பள்ளி சிறுமிகள் இனிப்பு மற்றும் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் போக்குவரத்து காவலர்களுக்கான அலுவலக கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவல் ஆணையாளர், போக்குவரத்து துணை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொள்வர்.

அதன்படி, இந்த வாரம் நடந்த கூட்டத்தில் விழிப்புணர் நிகழ்ச்சிகளால் விபத்துக்கள் குறைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கும், கார்களில் சீட்பெல்ட் அணிந்து வருபவர்களுக்கும் இனிப்புகள், மற்றும் வாழ்த்துக்கள் கூறும் விதமாக ரோஜா பூக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, உதவி ஆணையாளர் (போக்குவரத்து) மகுடபதி, போக்குவரத்து ஆய்வாளர் (மேற்கு) சதாசிவம் மற்றும் உதவி ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியில் ஒப்பணக்கார வீதி மற்றும் வைசியாள் வீதி சிக்னலில் ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி சிறுமிகளை வைத்து இனிப்புகள் மற்றும் பூக்கள் வழங்கப்பட்டது.



இதில் நேற்று 80-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு "வெல்கம் ஹியரிங் ஹெல்மெட்" என்று புன்னகை பொங்க காவல்துறையுடன் இணைந்து சிறுமிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...