விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த வரும் என் தமிழினம்: ஹர்பஜனின் கலக்கல் டுவிட்

நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும், திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியை காண  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் 1,000 பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில், சென்னை அணியின் ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர்.

இதனிடையே, போட்டியைக் காண பலநூறு மடங்கு மைல்கள் தாண்டி வரும் ரசிகர்களை, சென்னை அணியின் வீரர் ஹர்பஜன்சிங் வழக்கம் போல தமிழில் டுவிட் செய்து வரவேற்றுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்..!. உங்கள் அன்புக்கு நானடிமை..!. நீங்க வேற லெவல் மாஸ் யா... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...