எச். ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை

கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ள எச். ராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எச். ராஜா தொடர்ந்து இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும், தி.மு.க., தொடர்பாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை உருவாகும். சட்ட ரீதியாக எச். ராஜா மீது வழக்கு தொடுப்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும்," என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...