தண்ணீருக்காக காத்திருந்து கண்ணீர் விட்டு மடிந்த தென்னை மரங்கள்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக கருகிபோன தென்னை மரங்களை கனத்த மனதுடன் விவசாயிகளே வெட்டி சாயிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக கருகிபோன தென்னை மரங்களை கனத்த மனதுடன் விவசாயிகளே வெட்டி சாயிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் தென்னை நகரமான பொள்ளாச்சியில் பிரதானமாக தென்னை சாகுபடியே அதிகளவு உள்ளது. ஒரு காலத்தில் விவசாய தோட்டங்களில் பச்சை பசேல் என காணப்பட்ட தென்னை மரங்கள், தற்போது எலும்பு கூடுகளாக காணப்படுவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்தும், கிணறுகள் வற்றியும், தண்ணீர் இல்லாத காரணத்தால் நீண்ட கால சாகுபடியான தென்னை சாகுபடி முற்றிலும் ஆழியும் நிலை ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் மூலம் பாசன தண்ணீர் பெற்று தென்னை சாகுபடி செய்த சிறுகுறு விவசாயிகள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஆயிரம் ஏக்கர் பாசன கால்வாய் பகுதிகளை ஒரு மடை பாசன முறையில் செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு சோதனைக்காக செயல்படுத்தபட்ட ஒரு மடை பாசன முறையை கடந்த 2013-ம் ஆண்டு செயல்படுத்த தமிழக அரசுக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். ஆனால், பி.ஏ.பி பாசனத்திட்டத்தில் 42 கிளை வாய்க்கால்களில் ஆயிரம் ஏக்கருக்கு குறைவான பாசனம் முறை இருப்பதால் ஒரு மடை பாசன முறை செயல்படுத்தாமல் இருகின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி அருகேயுள்ள சுந்தரகவுண்டனூர், போளியகவுண்டனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஒரு மடை பாசன முறை செயல்படுத்தாத காரணத்தால் தற்பொழுது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், தென்னை மரங்கள் கருகி மொட்டை மரங்களாகக் காட்சியளிக்கிறது.



இது குறித்து விவசாயி முத்து ரத்தினம் கூறுகையில், "முடிந்த வரை தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி வந்தாலும், அடிக்கும் வெயிலுக்கு தென்னை மரங்களை காப்பற்றுவது மிகவும் சிரமமாக இருக்கிறது," என்றார்.

மற்றொரு விவசாயியான கனகராஜ் கூறியதாவது:- பொள்ளாச்சியில் இருமடை விவசாய பகுதிகளான கோவில்பாளையம் மடை பகுதிகளில் ஒரளவு விவசாயம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மடை பகுதிகளில் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகி மொட்டை மரமாக காட்சியளிக்கிறது. சுமார் 40 ஆயிரம் தென்னை மரங்களை விவசாயிகளே வெட்டி தங்களின் குடும்ப செலவுக்கு உபயோகித்து வருகின்றனர். தண்ணீர் தட்டுபாட்டால் கால்நடைகளுக்கும் கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது, எனக் கூறினார். 



வறட்சியினால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 4,000 வரை இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அதேபோல, நிலத்தடி நீர் உயரவும், கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், பி.ஏ.பி திட்டத்தில் ஒரு மடை பாசனத் திட்டத்தை செயலபடுத்த தமிழக அரசு உடனே முன் வர வேண்டும். இல்லையெனில், பொள்ளாச்சி பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து பாதிக்கப்பட்ட தென்னைக்கு உரிய நிவரணம் வழங்க வேண்டும் என்றும் தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...