திருமுருகன்பூண்டி சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்றக் கெடு விதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்படும் சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் செயல்படும் சிற்ப கலைக்கூடங்களை வேறு இடத்திற்கு மாற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.

திருமுருகன்பூண்டி பகுதியில் அதிக தூசியின் காரணமாக காற்று மாசுபடுவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் சிற்ப கலைக் கூடங்களை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் பூண்டி பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் திருமுருகன்பூண்டி சிற்ப கலைக் கூடக் கலைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 



இந்தப் பேச்சுவார்த்தையில் 9 மாத காலத்திற்குள் திருமுருகன்பூண்டி சிற்ப கலைக் கூடத்தை சேவூர் அருகே குரும்பபாளையம் பகுதிக்கு இடம் மாற்றம் செய்து கொள்ள வேண்டும், அந்தப் பகுதிக்கு அரசு சார்பில் குடிநீர், சாலை வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனப் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தப்பட்டது. 



இது தொடர்பாக சிற்ப கலைஞர்கள் கூறுகையில், "மாற்று இடம் சென்ற பின்னர் அப்பகுதி மக்கள் மீண்டும் எங்களை வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறக் கூடாது, கலைஞர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...