போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வரமுடியுமா..? எச். ராஜாவுக்கு ஆ. ராசா சவால்

கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

கோவை : தமிழகத்தில் சர்ச்சைக் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக வர முடியுமா..? என தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க., ஈரோடு மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சனைக்காக முதலமைச்சராக இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒரு துரும்பை கூடத் தூக்கிப் போடவில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் என்ற ஸ்டாலினின் யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தன்மானமுள்ள மனிதனாக இருந்தால் போலீசார் பாதுகாப்பு இல்லாமல் வந்து பார்க்கட்டும். நீட் விலக்கு, காவிரி நதிநீர் உரிமைகளைப் பெற்று தராத தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ. 46 கோடியில் நினைவு மண்டபம் கட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கல்லறையில், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த கொள்ளைக்காரி இங்கு உறங்குகிறாள் என எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டும், எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...