நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் சமுதாய மக்களுடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுபான்மையினர் சமுதாய மக்களுடன் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் தமிழக அரசு சிறுபான்மையின மக்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளைப் பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் நோக்கிலும், இப்பிரிவினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட கல்வி ஒரு முக்கியமாக ஊன்று கோலாகும் என்ற அவசியத்தை கருத்திற் கொண்டு சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டிற்கு அதிக அளவில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

சிறுபான்மையின மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட மாநில அளவில் தனியே சிறுபான்மையினர் நல இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டும், மாவட்ட அளவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 1 கண்காணிப்பாளர், 1 இளநிலை உதவியாளர் மற்றும் 1 தட்டச்சர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும், பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்காக 35 சதவீத, தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி 4,06,324 மாணவ, மாணவியருக்கு ரூ.61.95 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும் கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனி நபர் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் உதவி திட்டம், ஆட்டோ கடன் திட்டம், சிறு கடன் திட்டம் என 5 வகை கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களிடம் குறைகள், கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா, மாநில சிறுபான்மையின ஆணையக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எஸ்.சையது காமில் சாஹீப் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சிறுபான்மையினர்  மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...