தமிழகத்தில் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை திறக்க நடவடிக்கை

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் மக்கள் மன்ற கிளைகளை உருவாக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதி நாளில் அரசியலில் பிரவேசித்த ரஜினி, முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றம் செய்து, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.  மக்கள் மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்தக் கிளைகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 65,500 குக்கிராமங்களில் மன்றத்தின் கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணி தீவிரமாக நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 65,000 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அந்தப் பட்டியலுடன் புதிய கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...