ஊடக பெண்கள் குறித்து சர்ச்சை பதிவு : எஸ்.வி. சேகரை கைது செய்யக் கோரி புகார்

கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.



அருப்புக் கோட்டை தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, தன்னிடம் பயிலும் மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான தொலைப்பேசி உரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் தொடர்பிருக்கலாம் என பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முதல்முறையாக ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஒரு பெண் நிரூபர் ஒருவரின் கண்ணத்தை தொட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த பெண் நிரூபரும் டுவிட்டரில் ஆளுநருக்கு எதிராக கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி. சேகர், பெண் நிரூபரை வறுத்தெடுத்திருந்தார். மேலும், பெண் நிரூபர்களும் ஊடகத்துறையில் பாலியல் வன்கொடுமை சந்திப்பதாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 



இந்த நிலையில், ஊடக பெண்கள் குறித்து வக்கிரகமான முறையில் சமூக வலைதளத்தில் பதிவுசெய்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பெண் பத்திரிகையாளரை அவதூறாக அவர்களின் கண்ணியத்தை களங்கபடுத்தும் விதமாக சமூகவலைத்தளங்களில் ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுப்படுத்தியுள்ளார். இது ஒட்டுமொத்த மக்களையும், பெண்களையும் கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். எஸ்.வி. சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது :- ஊடக பெண்களை தரக்குறைவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட எஸ்.வி சேகரை, உடனடியாக கைது செய்ய வேண்டும். தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நிலையில், எஸ்.வி. சேகர் மிக தாழ்ந்த முறையில் பெண் பத்திரிகையாளர்களை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஆகவே, இவர் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...