16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டி இன்று தொடக்கம் : வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியின், ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டியின், ஒரு பகுதியாக, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 



தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று காலை துவங்கியது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 100 முதல் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என 46 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.



இன்று காலை நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் நடை போட்டியில் உத்தராகண்ட் மாநில வீராங்கனை ரோஜி பட்டேல் முதலிடத்தைப் பிடித்தார். ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹரியானா வீரர் குர்பிரீத் முதலிடத்தையும், தமிழக வீரர் சஞ்சய்குமார் இரண்டாம் இடத்தையும், உத்தரபிரதேச வீரர் அஜய்குமார் பிந்த் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மகாராஷ்ட்ரா வீராங்கனை பூனம் சொனுனே முதல் இடத்தையும், குண்டு எறிதலில் உத்தரபிரதேச வீராங்கனை கிரண் பலியான் முதலிடத்தையும் பிடித்து அசத்தினர். 



மாலையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதன்மை அதிகாரி சுந்தரராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இன்று மதியம் பெய்த மழையின் காரணமாக போட்டிகள் சிறிது நேரம் தடைபட்டது. மேலும், மைதானத்தில் தேங்கிய தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர். இருப்பினும், தண்ணீர் முழுமையாக அகற்றப்படாததால், முழுத் திறனை வெளிப்படுத்துவதில் சிரமமாக இருந்ததாக வீரர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...