திருப்பூரில் ஆசைவார்த்தைக்கு அடிபணிந்த செல்போன் திருடர்கள்

திருப்பூர் : திருப்பூரில் மிளகாய் பொடி தூவியும் கத்திமுனையில் செல்போன் திருடிய திருடனை, பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் உதவியுடன், ஆசைவார்த்தை காட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் மிளகாய் பொடி தூவியும் கத்திமுனையில் செல்போன் திருடிய திருடனை, பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் உதவியுடன், ஆசைவார்த்தை காட்டி பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் ஊற்றுக்குளி சாலை இரண்டாம் இரயில்வே கேட் பகுதில் வேலை செய்துவருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு இரவு வீடு திருப்பும் போது, கமலக்கண்ணனின் இருசக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் மின்மாயனம் முன்பு நின்றுள்ளது.

அதைத் தொடர்ந்து உடன் வந்த கமலக்கண்ணனின் நண்பன் வாகனத்தை படுக்கவைத்து அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு செல்வதையும் கமலக்கண்ணன் தனியாக வருவதைக் கண்ட ஜீவகனேசன் மற்றும் விக்னேஷ் இருவரும் இருசக்கர வகந்த்தில் வந்து, கமலக்கண்ணன் மீது மிளகாய்த்தூளை தூவிவிட்டு செல்போனை பிடுங்கியுள்ளனர்.

அப்போது கமலக்கண்ணன், திருடனின் சட்டையை பிடித்த போது ஜீவகனேசன் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கமலக்கண்ணன் தனது நண்பர்கள் உதவியுடன், நல்லூர் பகுதியில் கமலக்கண்ணனுக்கு தரவேண்டிய பணம் ரூ.15,000/- பஸ்டாப் அருகில் உள்ள பெட்டிக்கடையில் தந்துள்ளேன் என்றும் வந்து வங்கிக்கொள்ளவும் என சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளனர்.



சிறிது நேரம் கழித்து ஜீவகனேசன், அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு அருகில் சுற்றிவந்துள்ளான். மேலும், அந்த பெட்டிக்கடைக்கு சென்று பணத்தை கேட்டபோது அருகில் இருந்த கமலக்கண்ணனின் நண்பரான விஷ்ணு அவனை பிடித்துள்ளார். அதனை கண்ட மற்ற நண்பர்களும் வந்து சூழ்ந்துகொண்டு அவனைபிடித்து அருகில் உள்ள ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நண்பர்கள் குழுவாக சேர்ந்து திருடனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த  சம்பவம் திருப்பூர் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...