பல்லுயிர் பெருக்கத்திற்காக வனக்குட்டையில் 2,000 மீன்களை விட்ட வனத்துறை

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட குட்டையில் பல்லுயிர் பெருக்கத்திற்காகவும், பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாகவும் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு அமைக்கப்பட்ட குட்டையில் பல்லுயிர் பெருக்கத்திற்காகவும், பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாகவும் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. 



கோவை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் கடுமையான தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் உழியூர் என்ற இடத்தில் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் செயற்கை குட்டை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குட்டைக்கு அருகில் இருக்கும் ஆற்றில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் வரை செயற்கையாக குழாய்கள் அமைத்து, தண்ணீர் கொண்டு வரப்பட்டு குட்டையில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், மழைக் காலங்களில் இதில் தண்ணீர் நிரம்பினால் ஒரு வருடம் வரை வனவிலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. அத்துடன் தொடர்ந்து செயற்கையாகவும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால் இந்தக் குட்டைகளில் பறவைகளும் அதிக அளவில் தண்ணீர் தேடி வரத்தொடங்கியுள்ளன.



எனவே, இங்கு வரும் பறவைகளுக்கு தொடர்ந்து உணவு அளிக்கும் வகையிலும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் உழியூர் வனக்குட்டையில் சுமார் 2,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இதனால், குட்டைக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முயற்சி மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...