எரிவாயு நுகர்வோருக்கு அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடு

திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் : எரிவாயு நுகர்வோர் அனைவருக்கும் விபத்து காப்பீடு உள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் விபத்து காப்பீடாக இருப்பதாக திருப்பூரில் இந்துஸ்தான் பெட்ரோலிய வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.



சுல்தான் பேட்டையில் பிரதம மந்திரி சமையல் எரிவாயு பஞ்சாயத்து திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பான முறையில் எரிவாயுவைப் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநர் ஜெயகிருஷ்ணன் பேசுகையில், "எரிவாயு இணைப்பு பெற்ற அனைவருக்கும் விபத்து காப்பீடு வசதி உள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 6 லட்சம். ஒரு விபத்துக்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை, மருத்துவ செலவுடன் ரூ. 30 லட்சமாகும். தனிநபர் உயிரிழப்பு காப்பீடு ரூ. 2 லட்சம். இந்தியா முழுவதும் 22.5 கோடி இணைப்புகள் உள்ளன. இதுவரையில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் ஆயிரம் பேருக்கு காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது," என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...