தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். 



குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் காவல்நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தடாகம் பகுதியில் புதிய காவல்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, புணரமைக்கப்பட்ட காவல்நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த புதிய காவல்நிலையம் 34-வது காவல் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். மாவட்டத்தில் ஏற்கனவே, 33 காவல்நிலையங்கள் மற்றும் 3 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. 

தடாகம், சின்ன தடாகம், வீரபாண்டி, பன்னிமடை ஆகிய நான்கு கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பட்டிற்குள் வருகின்றன. இரண்டு உதவி ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் 9 பேர் மற்றும் காவலர்கள் 2 பேருடன் இந்த காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் திறக்கப்பட வேண்டிய இந்த காவல்நிலையம், தடாகம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாலை 3.30 மணியளவில் திறக்கப்பட்டது. 

"மலைவாழ் மற்றும் கிராமமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் போது துடியலூர் காவல்நிலையத்தை நாடிச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, இந்த காவல்நிலையம் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்" என்று போலீசார் தெரிவித்தனர். 

புதிய காவல்நிலையம் திறப்பு விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...