கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பு நடத்தும் மாரத்தான்

கோவை : உலக ஆரோக்கிய தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிட்டு கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.

கோவை : உலக ஆரோக்கிய தினம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னிட்டு கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. 



இது தொடர்பாக கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் ஆர்.டி. வினோத் ராஜ்குமார் கூறுகையில், "உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில், சிறப்பான விஷயம் என்னவெனில், குழந்தைகளை தாக்கும் புற்றுநோயின் 70 சதவீத நோய் தாக்கத்தை குணப்படுத்த முடியும். இந்த நிலையில், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டும் வரும் 29-ம் தேதி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.



(5 கி.மீ மற்றும் 10 கி.மீ.) மரத்தான், (3 கி.மீ) வாக்கத்தான் போட்டிகளில், தங்களது உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் என சுமார் 1,200 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பங்கேற்க வருபவர்களுக்கு ரூ. 600-ம், கோவை இந்திய மருத்துவ கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு ரூ. 500-ம், மாணவர்களுக்கு ரூ. 300-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...