எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

கோவை : பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க., ஆதரவாளர் எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. 



ஆளுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த பா.ஜ.க.,வின் எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்திருந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்.வி. சேகருக்கு, பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எஸ்.வி. சேகரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, எஸ்.வி. சேகர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 



இந்நிலையில், எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்கள் காத்திருப்புப் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 



பின்னர், எஸ்.வி. சேகர் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஆணையரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள், உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அப்போது பேசிய ஆணையர், "பத்திரிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...