தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் : திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தியதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, பள்ளி வாகனங்கள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக, திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து 140 பள்ளிகளைச் சேர்ந்த 661 பேருந்துகள் சோதனைக்காக வந்திருந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிகள், முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி ஆகியவை சோதனை செய்யப்பட்டன. அவற்றில் குறைபாடுகள் உள்ள பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. 



இந்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார். பள்ளி வாகனங்களைக் கவனமாக இயக்கவும், ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர். மேலும், காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வினை பார்வையிட வருவதாக சொல்லியிருந்த நிலையில், 11 மணிக்கு மேல் ஆட்சியர் வந்ததால் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள் வெயிலில் அதிக நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...