வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு : ரயில்மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை : வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து, கோவையில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

அண்மையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைக் கண்டித்து பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ததைக் கண்டித்து ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்தடைந்த பயணிகள் ரயிலில் வந்த தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தின். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-ல் திருத்தம் செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர். மேலும், ரயில் எஞ்சின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...