தார் சாலை போல் இருக்கும் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் ஓடுதளம் : பி.டி. உஷா குற்றச்சாட்டு

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், தார் சாலைகள் போல் இருப்பதாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குற்றம்சாட்டியுள்ளார்


கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், தார் சாலைகள் போல் இருப்பதாக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்நாடு தடகள சங்கம், கோவை தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகளை கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தி வருகிறது. 16 வயது முதல் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஆந்திரா, பீகார், கர்நாடகா, ஒடிசா, டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 840 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

இதில், கேரள அணி சார்பாக பங்கேற்கும் ஒரு அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் தடகள வீராங்கனையும், இந்தியாவின் தங்க மங்கை  என அழைக்கப்படும் பி.டி. உஷா நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் சின்தடிக் ஓடுதளம், 10 வருடத்திற்கு முன்பு போடப்பட்டது. அது தற்போது தார்சாலை போல் உள்ளது. ஓரிரு நிகழ்வுகளில் பங்கேற்கும் போது பிரச்சனை எதுவும் இல்லை. கூடுதல் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும், தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குப் போட்டிகளுக்கு முன்பாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கான போதிய வசதிகள் இல்லை," என அவர் குற்றம்சாட்டினார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...