பொருளாதார ரீதியாக பின்தங்கிய தடகள வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்டிவ் நிறுவனம்

கோவை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 தடகள வீரர்களுக்கு இலவசமாகக் காலணிகளை கொடுத்து கோவையைச் சேர்ந்த ஸ்போர்டிவ் நிறுவனம் வழங்கி ஊக்குவித்தது

கோவை: பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 தடகள வீரர்களுக்கு இலவசமாகக் காலணிகளை கொடுத்து கோவையைச் சேர்ந்த ஸ்போர்டிவ் நிறுவனம் வழங்கி ஊக்குவித்தது. 

கோவையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்போர்டிவ் நிறுவனம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தடகள வீரர்களைக் கண்டறிந்து, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.முதற்கட்டமாக, கோவையில் பயிலும் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு காலணிகளை இன்று வழங்கியது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாணவ, மாணவியருக்கு காலணிகளை ஸ்போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா துரோனாசாரியா விருது பெற்ற ரமேஷ் வழங்கினார். 

அப்போது, அவர் கூறும் போது :- சிறந்த வீரர்கள் ஆரம்பத்தில் அடையாளம் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர். வெற்றிக்குப் பிறகு வரும் புகழ் மற்றும் பணம் கஷ்டப்படும் போது கிடைக்கப் பெறுவதில்லை. மேலும், இம்மாதிரியான முயற்சிகளின் மூலம் திறன் வாய்ந்த வீரர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும், எனக் கூறினார். 



இதன் பின்னர் ஸ்போர்டிவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கீதா கூறுகையில், "இது தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை முன்னேற்றுவிக்க எடுக்கப்பட்ட முதல் முயற்சியாகும். ஒவ்வொருவரின் விளையாட்டு விபர குறிப்புகள், செயல்திறன் கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் அவர்களுக்கு தேவையான ஸ்பான்சர்ஷிப் ஆகியன பொருளாதார ரீதியாக பின்தங்கிய தடகள வீரர்களுக்கு கிடைக்கப் பெற வேண்டும். ஆயிரம் மைல் பயணம் ஒரு ஜோடி காலணியில் துவங்குகிறது. சிறந்த விளையாட்டு திறமை ஒருபோதும் கவனிக்கப்படாமல் இருந்து விடக்கூடாது," என்றார். 

இந்நிகழ்ச்சியில், கர்நாடக தடகள சங்க செயலாளர் ராஜவேலு, கோவை தடகள சங்கத் துணைச் செயலாளர் நிஜாமுதீன் உள்ளிடோர் பங்கேற்றனர். திறன் வாய்ந்த வீரர்கள் ஊக்குவிப்பது நல்ல விஷயம், ஆனால் சரியான நபர்களுக்கு அது சென்றடைய வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...