டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வானவர்களுக்கு ஓர் எளிய முறை அறிமுகம்

குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது.


குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், கலந்தாய்விற்கும் என இரண்டு முறை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரையம் உள்ளிட்ட அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகின்ற அரசு இ-சேவை மையங்களில் அசல் சான்றிதழ்களை பக்கத்திற்கு ரூ. 5 (ஐந்து ரூபாய் மட்டும்), வீதம் செலுத்தி ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையானது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாவட்ட தலைநகரில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் வரும் 23-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...