கோவையில் காவடி போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

கோவை: பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.

கோவை: பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் சங்கமம் கலைக் குழு சார்பில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், காவடியை தலையில் வைத்து ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல் போன்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

12 குழுக்களைச் சேர்ந்த சார்ந்த 400 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர். மூன்று வயது சிறுவர் முதல் 60 வயதுள்ளவர்கள் வரை இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் தோலில் காவடியை சுமந்துகொண்டு சர்வ சாதாரணமாக ஆடியதும், ஏணியின் மீது ஏறி காவடி ஆடியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இது குறித்து சங்கமம் கலைக்குழு ஆசிரியர் கனகராஜ் கூறுகையில், "அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க கருமத்தம்பட்டி பகுதியில் காவடி ஆட்டத்தை அனைத்துத் தரப்பு மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஒயிலாட்டம், கும்மி ஆட்டம் ஆகியவை இந்தப் பகுதியில் பிரபலமாகி வருகிறது. ஏராளமானோர் இதைக் கற்று கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கலைகளை கற்றுக் கொள்வதில் சிறுவர்கள் முதல் 60 வயதுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், பாரம்பரிய கலைகளை மீண்டும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...