ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை - ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு

கோவை : ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை : ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை அடிப்படையாகக் கொண்ட புதிய காவல் உதவி மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட இக்காவல் உதவி மையத்தை கூடுதல் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மொழி பிரச்சினை காரணமாக ஏற்படும் இடையூறுகளை களையும் விதமாகவும், உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டும் விதமாகவும் இந்த காவல் உதவி மையம் செயல்படும். இந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிப்புலமை உள்ளவர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இதற்கென தனியாக நியமிக்கப்பட்டு வெளி மாநில மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி புரிவார்கள். 

தற்போது, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள காவல் உதவி மையம் போல், விரைவில் பிற ரயில் நிலையங்களிலும் தொடங்கப்படும். ரயில்வேயில் தற்போது மூன்றில் ஒரு பங்கு பெண் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ரயில் பயணங்களின் போது பெண் பயணிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பயணத்தின் போது தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை வாய் மொழியாக புகார் தெரிவித்தால் கூட அதனை வழக்காகப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...