கோவை ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறையினர்: தற்கொலை முயற்சிகளை தடுக்க தீவிரம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் யாரேனும் தற்கொலை முயற்சி செய்தால் அதனைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் யாரேனும் தற்கொலை முயற்சி செய்தால் அதனைத் தடுக்கவும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி குடும்பத்துடன் 4 பேர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதன் பின்பு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளன்று பொதுமக்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.



இது குறித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்புறம் 15 காவலர்களும், வளாகத்தினுள் 10-க்கும் மேற்பட்ட காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் உதவி ஆணையர் தலைமையில் இந்த குழு இயங்கும்." என்றார்.



இதனிடையே, பாதுகாப்புகளையும் மீறி யாரேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அவர்களை மீட்க இரு தீயணைப்பு வீரர்களும் காப்பாற்ற தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் தீயணைப்பு துறையினர் வைத்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பி.பிரதிப்குமார் கூறுகையில், "பணியில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவேளை யாரேனும் தீ பற்றவைத்துவிட்டால் அதனை அணைக்க தீ அணைப்பான் தயார் நிலையில் உள்ளது. மேலும், தண்ணீருடன் 2 வாளிகளும், கயிறுகளும், போர்வைகளும் உள்ளன." என்றார்.

இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் கிடைத்தாலும் இது அனைத்து நாட்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...