கோவையில் ஏர் கலைப்பைகளுடன் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் சார்பில் கோவையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 



இதன் ஒருபகுதியாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், போதிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசையும் கண்டித்து கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், சிலர், ஏர் கலைப்பைகளுடனும் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நஞ்சப்பா சாலையில் துவங்கிய மனித சங்கிலி போராட்டம் காந்திபுரம், பவர்ஹவுஸ், கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை என சுமார் 3 கி.மீ தூரத்துக்கு நடைபெற்றது.



மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் திரண்டெழுந்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தினால் பா.ஜ.க., அரசைக் கண்டித்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...