பிரதமரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது: கோவை மாநகர போலீஸ் நடவடிக்கை

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் ரபீக் (53).

வழக்கில் இருந்து விடுதலையான இவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் செல்போனில் உரையாடுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் ரபீக்-ஐ தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை அவரை கரும்புக்கடை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், தான் 160 வாகனங்களை அடித்து உடைத்ததாக ரபீக் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் யாராவது ரபீக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரபீக் மீது ஏற்கனவே (போக்கிரி) சரித்திரப் பதிவேடு தொடங்கியிருப்பதும், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...