கர்நாடக தேர்தலுக்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் : அய்யாக்கண்ணு நம்பிக்கை

கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.


கோவை : கர்நாடகா தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் மோடி அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 

விவசாயிகளுக்கு இலாபகரமான விலை, தண்ணீர் கொடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தை பாலைவனமாக உருவாக்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். மேலும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு உள்ளது. 



கர்நாடகா தேர்தல் முடிந்ததும், பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையும் தனக்கு உள்ளது, என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...