சச்சினுக்கு 45-வது பிறந்த நாள் : நூலகம் திறந்து கவுரவித்த கேரள அரசு

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கேரளா: கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46-வது பிறந்த நாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் கேரள அரசின் சார்பில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார்.

இன்று சச்சின் தெண்டுல்கருக்கு 45 வயது முடிந்து, 46-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முன்னாள் மற்றும் தற்போதை வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, வி.வி.எஸ்., லட்சுமண், முகமது கயூப், குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

தனது பிறந்த நாளையொட்டி, சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். இதனிடையே, சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பற்றி பல்வேறு மொழிகளில் தெரிந்து கொள்ள உதவும் வகையில், கேரளாவில் 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயரில் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...