வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரல் நிர்மலா தேவியின் குரல்தான்: அறிக்கையில் உறுதி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் குரலும், வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரலும் ஒன்றுதான் என சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் குரலும், வாட்ஸ்அப் ஆடியோவில் இருந்த குரலும் ஒன்றுதான் என சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி முதல் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நிர்மலாதேவி போலீசில் மாட்ட முக்கிய ஆதாரமாக இருந்த வாட்ஸ்அப் உரையாடலில் இருந்தது அவரது குரல் தானா..? என்ற கேள்வியும் எழுந்தது. இந்தக் கேள்வி விசாரணையின் போக்கை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக, அவரது குரலை சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, வாட்ஸ்அப் ஆடியோ - நிர்மலா தேவியின் குரலை ஒப்பிட்டு சோதனை செய்ததில், இரு குரல்களும் ஒன்று என சோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...