கெயில் விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் - விவசாயிகள்

கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அக்குழுவைச் சேர்ந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர், கெயில் நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் மீண்டும் விவசாயிகள் நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினர்.



மேலும், தமிழகத்தில் ஒசூர் வழியாக வாளையாறு வரை கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியார்க்க எரிவாயு குழாய் பதிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இவற்றை வகை செய்யும் இந்திய டெலிகிராப் சட்டங்களை எதிர்த்து சட்ட எதிர்ப்பு மாநாட்டினை ஒசூரில் ஏப்ரல் 29 ம் தேதி நடத்த உள்ளோம் என்றனர்.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...