திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச்சந்தை வியாபாரிகள்

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : வாரச் சந்தை வியாபாரிகளிடம் அதிக சுங்கத் தொகை வசூலிப்பதாகவும், அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். 

அனுப்பர்பாளையத்தில் வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சந்தையில், 500-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளை அமைத்து வருகின்றனர். அவ்வாறு, கடை அமைப்பவர்கள் சுங்கத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டுவது வழக்கம். ஆனால், கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அவ்வாறு வசூலிக்காமல், கடைக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை வசூலித்து வருவதோடு, பணம் செலுத்த முடியாதவர்களிடம் அடியாட்களைக் கொண்டு மிரட்டி வருவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

எனவே, இப்பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகனை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதையடுத்து, சுங்கம் வசூலிப்பதை முறைப்படுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...