நாராயன், நாராயன் : சர்ச்சையில் சிக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது.

பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. 

ராஜஸ்தான், குஜராத் என உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர் பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கை கையாளும் நபர் தவறாக அந்த வீடியோ பதிவை பகிர்ந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டாலும், ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. கிரிக்கெட் நிர்வாக குழு டுவீட் நீக்கப்பட்டிருந்தாலும், டுவீட் ஸ்கிரீன் ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...