பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு வழங்கப்படும் நிர்பயா நிதி ரூ. 800 கோடியாக அதிகரிப்பு

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 

குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனையான பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகார்களை பதிவிட இலவச அழைப்பு எண்களை அளித்து வரப்படுகிறது. 

வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களுக்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கூட அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர் கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், தோட்டத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, ஆண்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ 1091 என்ற எண்ணிலோ அல்லது காவல்நிலையம் எண்ணான 100-க்கு தொடர்பு கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளது. எனக் கூறினார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...