குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருகிறது. ஆனால், அண்மை காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத் துவங்கியுள்ளதும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீட்டின் சுவர்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகரையொட்டியுள்ள சமயபுரம் பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த கருப்புசாமி மற்றும் செல்வராஜ் என்பவர்களின் வீடுகளின் சுவர்களை இடித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றன. ஆனால், அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பிய காரணத்தினால், சாலையைக் கடந்த யானைகள் பவானி ஆற்றுப்பகுதிக்குள் நுழைந்தது. யானைகளின் தொடர் அச்சுறுத்தலால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

மாலை நேரமாகியதும், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதால் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போது, இந்த வீடுகளையும் யானைகள் இடித்து தள்ளுவதால் செய்வதறியாது தவிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, நெல்லிமலை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும், யானைகளால் தங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...