கள் இறக்கக் கட்டப்படும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மனு

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பல்லடம், மங்கலம், ராமநாயக்கன்பாளையம், குண்டடம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை மரங்களில் கள் இறக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த பானைகளை காவல்துறையினர் உடைத்ததுடன், விவசாய தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கள் இறக்க அனுமதியுள்ள நிலையில், தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை அமலில் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும், கள் இறக்க அனுமதி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் இத்தகைய செயல் விவசாயிகளைப் பாதிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி பாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். தொடர்ந்து, கள் இறக்க தமிழக அரசு மறுக்கும் பட்சத்தில் மாநில அளவில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தவும், வரும் 10-ம் தேதி கனியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வருவதாக வந்த தகவலையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...