திருப்பூரில் பெருகி வரும் பாலியல் தொழில்: ஒருவாரத்தில் இரு பாலியல் கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகர் பகுதியில் அதிகரித்துள்ள பாலியல் தொழிலை முறியடிப்பதே போலீசாருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்துள்ள திருப்பூரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகர் பகுதியில் அதிகரித்துள்ள பாலியல் தொழிலை முறியடிப்பதே போலீசாருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அமர்ஜோதி கார்டன் ஏ.எஸ்.நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆண்கள் வந்து சென்றனர். இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியினர், அங்கு பாலியல் தொழில் நடக்கலாம் என மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சோதனை செய்யுமாறு திருப்பூர் தெற்கு மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் சென்றனர். அப்போது, அந்த பங்களா பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த பங்களாவைச் சுற்றி வளைத்தனர்.



அந்த பங்களாவில் தனித்தனியாக 3 அறைகள் இருந்தன. அவற்றின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, பெண் போலீசார் திடீரென்று சென்று கதவுகளை தட்டினர். பின்னர், நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது, நடத்தப்பட்ட விசாரணையில், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 இளம்பெண்களை மகளிர் போலீசார் மீட்டு கோவை துடியலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, பாலியல் தொழில் புரோக்கர்களான திருப்பூர் கோவில்வழியைச் சேர்ந்த ஆனந்தா (வயது 41), செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி (41), ஏ.எஸ்.நகரைச் சேர்ந்த ஜெயகோபால் (29), சேரன் தொழிலாளர் காலனியைச் சேர்ந்த முருகானந்தம் (24) ஆகியோரே போலீசார் கைது செய்தனர்.



விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன் லைனில் வியாபாரம் செய்யப்போவதாக, இவர்கள் அந்த சொகுசு பங்களாவை ரூ. 25,000-க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன்படி, ஆன் லைனில் வியாபாரம் செய்வதுபோல், வாடிக்கையாளர்களை வரவழைத்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளனர்.

மேலும் இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. அங்கு இருந்த அனைவரையும் கைது செய்தோம். இதுபோன்று சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள், உடனடியாக கைது செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூரைப் பொறுத்தவரை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், குறிப்பாக பெண்கள் அதிகம் வேலை செய்கின்றனர் அவர்களிடம் ஆசைவார்த்தை பேசி இந்த செயலில் ஒரு சிலர் அவர்களை விழவைத்து விடுகின்றனர். பெண்கள் இதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்," எனத் தெரிவித்தனர்.



கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...