பிறந்த 2 நிமிடத்திற்குள் ஆதார் எண் பெற்ற குழந்தை: குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்று சாதனை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் புல்தானா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 1.48 நிமிடத்திலேயே அதிகாரிகள் ஆதார் எண் வழங்கியுள்ளனர். சாச்சி என பெயரிடப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர் இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருக்கின்றனர். மகாராஷ்ட்ராவின் புல்தானா பகுதியை சேர்ந்த பெற்றோர் குழுந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் அவர்களின் ஆதார் அட்டை மூலம் பால் ஆதார் பெற்றிருக்கின்றனர்.

வழக்கமான ஆதார் எண் பெற நமது பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் தகவல்கள் இல்லாமல் ஆதார் வழங்கப்படுகிறது. இந்த சேவை பால் ஆதார் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் மட்டும் பயன்படுத்தி குழந்தை பிறந்த 1.48 நிமிடங்களில் பால் ஆதார் பெறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், குறுகிய காலத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை என்ற சாதனையை சாச்சி பெற்றுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...