காவிரி விவகாரத்திற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை: கோவையில் எச்.ராஜா பேட்டி

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு இன்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவையில் மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த தலைமை ஏற்கும் கட்சியாக எதிர்க்கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு இங்கு யாரும் போராடுவதில்லை. மத்திய அரசுக்கும், பக்கத்து மாநிலத்திற்கும், இலங்கைக்கும் எதிராகத் தான் இங்கு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் சித்தரிக்கிறார்கள்.

தொடர்பு இல்லை

காவிரி விவாகரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்கும். நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல 9 பேர் கொண்ட குழுவை சம்மந்தப்பட மாநிலங்கள் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அதில் கேரளாவும் கர்நாடகாவும் இன்னும் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அவர்களை நியமிக்கும் வரை மேலும் இரண்டு வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அப்படியும் அவர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நீதிமன்றமே நியமிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும். அப்போது மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் எந்த வித சமந்தமும் இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க தற்போது அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களா?.

குட்கா விவாகரத்தில் சி.பி.ஐ நேர்மையாக விசாரணை செய்யும். பத்திரிக்கையாளர் குறித்த எஸ்.வி.சேகரின் பதிவு தவறானது அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அது பற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...